Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Sunday, February 13, 2011

பேனாவிலிருந்து பேஸ்டல் வரை

அமைதியான ஏரிக்கரை. அங்கே கேட்பாரற்ற ஓர் படகு. அந்த தீவு மாதிரி புல் வளர்ந்திருப்பதைப் பார்த்தால் ஆழம் கூட அதிகம் இருக்காது என்று தோன்றுகிறது. உண்மையிலே விடுமுறையை அனுபவிக்கணும்னா அப்படி ஒரு இடத்துக்கு போகணும்.

விடுமுறையா ? மூச் ! இருக்கிற வேலையை முடிச்சுக் குடுத்துட்டு அப்புறம் கேளு-ன்னு சொல்லுகிற ஒரு அடிமைத்தன வேலை. சரி படமாக வரைஞ்சாவது திருப்தி பட்டுக்கலாம்-ன்னு போட்ட படம்.



பேனாவில் ஆரம்பிச்சு அப்புறம் பேஸ்டல் கட்டியையும் தேச்சு ஒரு வழியா கிடைச்ச கொஞ்ச நேரத்தை ஏரிக்கரைக் கிட்ட போகாமலே அனுபவிச்சாச்சு.



ஆரம்பிக்கும் போது பேஸ்டலை பயன்படுத்த நினைக்கவில்லை, அப்படி இருந்திருந்தா பென்ஸிலிலேயே ஆரம்பித்திருந்திருப்பேன். விதி வலியது. எப்படியெல்லாம் புத்தியை இழுத்துகிட்டு போகுது பாருங்க :))

[ஸ்கேனர் இல்லாமல் போனதால் மொபைல் கேமிராவில் சுட்டது]

7 comments:

thamizhparavai said...

Simply superb sir.

KABEER ANBAN said...

நல்வரவு தமிழ்பறவை,

பாராட்டுக்கு மிக்க நன்றி.

raji said...

classic

KABEER ANBAN said...

வருக ராஜி,

தங்களுக்கு பிடித்திருப்பது கண்டு மகிழ்ச்சி.

பாராட்டுக்கு நன்றி

வே.நடனசபாபதி said...

படம் மிக மிக அருமை!

KABEER ANBAN said...

நல்வரவு நடனசபாபதி சார்,

ஓவியர் மாயாவின் பள்ளியில் பயின்ற தேர்ந்த ஓவியரான தாங்கள் பாராட்டியதில் மிக்க மகிழ்ச்சி.

மிக்க நன்றி

kankaatchi.blogspot.com said...

You can draw any type of pictures beautifully by using Ball point pen.
The drawing is superb.
Kindly see some pf my drawings in my blog. below.


http://kankaatchi.blogspot.in/2013/01/ball-point-pen-sketches.html