Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Monday, May 29, 2023

கண்ணனை நினைக்காத நாளிலில்லையே...

 தமிழ் நாட்டில்  மாணிக்கவாசகர் சிவபெருமானை தலைவனாக வைத்து நாயகி பாவத்தில் திருக்கோவையார் பாடியுள்ளார். இது ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணைவதற்கான  ஏக்கப்பொருளாகும். இறைவனைத் தேடுதலால் தமிழ் இலக்கியத்தில் அகப்பொருள் எனப்படும்.  

அவர் போலவே கலிங்கப் பகுதியான ஒடிஷாவில் வாழ்ந்த ஜெயதேவரும் கண்ணனை நினைத்து உருகி பாடிய பாடல்கள் "கீதகோவிந்தம் " என்ற பெயரில் வடமொழி பக்தி இலக்கியத்தில் மிகவும் புகழ் பெற்றது.

அவருடைய பாடல்கள் சிலவற்றுக்கு உருவகம் கொடுத்து நாற்பது அல்லது நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு நாட்காட்டி வெளிவந்திருந்தது.

வெறும் கோட்டு ஓவியமான அச்சித்திரங்களின் அழகில் மயங்கி  ஒரு சிலவற்றை  நான் ஒரு வரைபுத்தகத்தில் என் விடுமுறை நாட்களின் போது வரைந்திருந்தேன்.  அப்புறம் அது எங்கு போயிற்றோ, மறந்தே போனேன்.

சென்ற ஆண்டு திடீரென்று என் சகோதரிக்கு அப்புத்தகம் கிடைத்து அதிலிருந்த சில படங்களை வாட்ஸ்-ஆப் மூலம் அனுப்பி வைத்தாள். மிகவும் கசங்கிப் போயிருந்த தாள்கள், கோணலான காமிரா கோணம்   ஆனாலும் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. 

உடனே அதை மடிக்கணினிக்கு மாற்றி அதை சீர் செய்யும் முயற்சியில் ஈடுபட்டேன்.  அதன் விளைவே கீழே உள்ள படங்கள். மென்பொருள்  Paint 3D.






எனக்கு வாட்ஸ்-ஆப்பில் வந்த வடிவம் மேலே !!!   வலதுபுற மூலையில் ஜெயதேவரின் பாடல் ஆங்கில மொழிபெயர்ப்பில் கொடுக்கப்பட்டிருந்தது.

அதன் சாரம்,  'கண்ணன் தன் காலிற்கு மருதாணி இட்டு அழகு பார்க்கும் பாங்கை   ராதை வியந்து போற்றுவது' எனக் கொள்ளலாம்.

மெஹந்தி அல்லது மருதாணி  மிகப்பழமையான அலங்காரப் பொருளாக உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. எகிப்தியர்களின் பயன்பாட்டிற்கும் பழமையான ராமாயண காலத்திலிருந்தே மருதாணியின் பயன்பாட்டின் குறிப்பு நம் இலக்கியங்களில் காணப்படுகிறது. தற்காலத்தில் தென்னிந்திய திருமணங்களிலும் "மெஹந்தி" விழாவாகவே இடம் பெற்று விட்டது. அதற்காக ஏராளமாக பணம் செலவழிக்கிறார்கள்.

பாரம்பரியத்தில் பணத்தைத் தேடுவதே மனிதரின் குணமாய் போயிருப்பது கலியின் பிரபாவம். !!