Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Saturday, June 29, 2024

தவிக்கிற வாய்க்குத் தண்ணீர்....

     நாட்டின் தலைநகர், யமுனைக் கரையில் அமைந்திருக்கும், டில்லி நகரமே தண்ணீர் பிரச்சனையால் அல்லாடுகிறது.  இது வரலாறு காணாதது.  இதுவரையில் தென்னகத்தில்தான் தண்ணீரை வைத்து அரசியல் செய்து வந்தார்கள் என்று நினைத்தோம். இப்போது வடக்கிலும் ஆரம்பித்துவிட்டது.

 கோடை காலம்  வந்துவிட்டது.  விலங்குகளுக்கும் பறவைகளுக்கும்  கூட குடி நீர் பிரச்சனை. பலர் வீட்டுத் தோட்டங்களில் அல்லது மாடிகளில்  அகலமான பாத்திரங்களில்  வைத்து சுலபமான சேவையை செய்து வருகின்றனர்.

இதோ இந்த குருவி எப்படி கழுத்தை வளைத்து தொண்டைக்குள்  நீரை இழுத்துக் கொள்கிறது பாருங்கள்


  கோழி போன்ற சில பறவைகளுக்கு நீரை உறிஞ்சிக் குடிக்க முடியாது. கழுத்தை மேலே திருப்பி  நீரை உணவுக் குழாய்க்குள் இறக்குகின்றன.  புராணங்களில் சொல்லப்படும் சகோர பட்சியும் அப்படிப்பட்டது தானோ? அதனால்தான்  மழைத்துளியை மேலிருந்து விழும் போதே அருந்திவிடுகிறதோ!!

 சமீபத்தில் அப்படி மேலிருந்து விழும் துளிக்கென காத்திருக்கும் ஒரு பறவையைக் கண்டேன்.

 இரண்டு மாதங்களுக்கு முன்பு தஞ்சை சென்றபோது ஒரு அபூர்வமான சிற்பத்தை  கண்டேன். இடம், பெரிய கோயிலில் அம்மன் சன்னதி.

  ஊருக்கு திரும்பி வந்து தேடிய போது வலைத்தளம் எதிலும் அச்சிற்பத்தைப் பற்றிய குறிப்பு  கிடைக்கவில்லை. தமிழ் சங்க இலக்கியங்களில்  அப்படி ஒரு காட்சி வர்ணிக்கப்பட்டிருக்கிறதா என்றும் தேடினேன், அதிலும் தோல்வி. தமிழறிஞர்களுக்கு இதைப் பற்றி தெரிய வாய்ப்புண்டு.  அந்த சிற்பத்தை புகைப்படம் எடுத்து அதை சித்திரமாக வரைந்ததைத்தான் கீழே காண்கிறீர்கள்.


 ஒரு  அசாதாரண நிகழ்ச்சியை கண்டு சிற்பி இதை வடிக்க முயன்றாரா அல்லது ஒரு கவிஞனின் கற்பனைக்கு உயிர் கொடுக்கும் வகையில் வடித்தாரா என்பது கேள்விக்குரியதாகிறது.  

அதற்கானக் கவிதையை யாராவது எடுத்துக் கொடுக்கும் வரையில் எனக்குத் தோன்றிய வகையில் நான் ஒரு கவிதை எழுதி வைக்கிறேன்.

புள்ளுக்கு கூந்தல் வடி நீரும் குடிநீராமோ

உளிவடித்த சிலையும் உயிர்த்து வருமோ

வெளிவரும் ஆயிரம் ஆண்டுகள் சரிதம்

      களித்துப் போற்றவே,  தமிழரின்  பெருமை

                                                               ( புள் = பறவை )

குருவி நீர் குடிப்பது என் வரைப்புத்தகத்தில் பென்சில் கலரால் வரையப்பட்டது.

மங்கை கூந்தலை உலர வைப்பது டிஜிடல் முறையில் வரையப்பட்டது

No comments: