Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Sunday, June 27, 2010

உழைக்கும் கரங்கள் -2

தடியெடுத்தவன் தண்டல்காரன் -னு ஒரு பழமொழி. தண்டல் -ன்னா வரி, கடன், பழைய பாக்கி அப்படீன்னு நெனச்சுகிட்டிருக்கேன்.

ஆக, வசூலிப்பவன் தண்டல்காரன். தடி எதுக்கு? பயமுறுத்தலுக்கா இல்லை தற்காப்புக்கா ? எப்படியோ அந்த காலத்திலேந்து மூங்கில் கழி ஒரு நல்ல ஆயுதம்.

வெளியே கிளம்பறவங்களுக்கு தலையில ஒரு முண்டாசும் கையில் ஒரு தடியும் அவசியம் இருக்கணும். காலில் செருப்பு இருக்கோ இல்லியோ கையில ஒரு ஆளுயர கழி ரொம்ப முக்கியம். மாலை அல்லது இரவு நேரங்களில் பாம்பு போன்ற ஜந்துக்கள் தடியை வைத்து தரையில் டக் டகென்று சத்தம் செய்து கொண்டே போனால் பாதையை விட்டு விலகிடுமாம்.

சிலம்பாட்டத்தின் கதாநாயகனே இந்த கெட்டி மூங்கில் கழிதானே.

இந்தியாவில சுமார் 100 விதமான மூங்கில் விளையுதாம். உலகத்துல மிக அதிகமான மூங்கில் காடுகள் பரப்பளவு ( 96 லட்சம் ஹெக்டேர்) நம்ம நாட்டுலதானாம் ! ஆனா உலக சந்தயில நம்ம விற்பனை நாலே சதவீதம் தான்!. மத்ததெல்லாம் உள்நாட்டுலேயே வித்துடும் போல இருக்கு.

மூங்கிலை வைத்து வகைவகையான கைவினை பொருட்கள் செய்யறது, கூடைகள் செய்வது என்கிற வகையில் சுமார் 75 லட்சம் பேர் பிழைப்பு நடத்துறாங்களாம். மூங்கில் காடு வளர்ப்பு பற்றி இப்பதான் கொஞ்சம் கண்முழிச்சு பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க. ஏன்னா பாக்கி மரங்களை விட பத்து மடங்கு வேகமா வளரகூடியது மூங்கில். சீனா வில ஒரு ஹெக்டேருக்கு 3 டன் மூங்கில் வருஷத்துக்கு கெடச்சா நம்மூருல அரை டன்தான் கிடைக்குதாம்.


உழைக்கும் கரங்களுக்கு பொருத்தமான இந்த படம் ஒரு தினப்பத்திரிக்கையின் வாராந்திர மலரில் வெளியாகியிருந்தது. வர்ணப் பென்சிலின் வரைபடம். படம் பெரியதாக போனதால் ஸ்கேனருக்குள் அடங்கவில்லை. காமிராவில் எடுத்தது. ஒளி கொஞ்சம் முன்பின்னாக இருக்குது. ஆனாலும் பரவாயில்லை.

வீட்டிலிருந்து கொண்டே மூங்கில் கழிகளை தயார் செய்யும் வேலை இந்த பெண்மணிக்கு. அதனால் அவளுடைய வாண்டு பையனும் பின்னாலிருந்து எட்டிப்பார்க்கிறான் !:)

No comments: