சென்ற வருடம் டெலாவேரில் என மகள் வீட்டிற்கு சென்றிருந்த போது ஒரு ஓவியக் கண்காட்சிக்குப் போனேன். ஓவியர்கள் அனைவரும் பொழுது போக்குக்காக வரைபவர்கள். அவர்களுக்கென்று சிறிய அமைப்பு ஏற்படுத்திக் கொண்டு அதன் மூலம் இக்கண்காட்சிகளை ஏற்பாடு செய்கிறார்கள். யார் வேண்டுமானாலும் உறுப்பினராகலாம். பெரும்பாலோனோர் மூத்த குடிமக்களே,அதிலும் பெண்கள் அதிகம். ஆயில் அல்லது அக்ரிலிக் வர்ண உபயோகமே அதிகம் காணப்பட்டது.