Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Friday, May 9, 2008

சித்திரப் பெண்ணே சித்திரப் பெண்ணே கோபம் கொள்ளாதே

காதலியையோ, (புது) மனைவியையோ “நீ கோபிச்சுக்கிட்டாலும் அழகாத்தான் இருக்கே' அப்படீன்னு பொய் சொல்லி சமாதானம் செய்ய பாக்கறது எல்லாருக்கும் பழகிபோன ஒண்ணு. ஆனா குழந்தைங்க கோபிச்சுக்கிட்டாலும் அழகாத்தான் இருக்கும். அதுக்கு காரணம் அவங்க கள்ளமறியா மனசு.

1896-ல மேரி கெஸாட்டி ங்கறவங்க பேஸ்டல் வர்ணத்துல வரைஞ்ச ஒரு படத்த பார்க்கும் போதெல்லாம் எனக்கு சின்ன வயதில் சொல்லிக் கேட்ட பாட்டொண்ணு ஞாபகம் வருது.

சித்திரப் பெண்ணே சித்திரப் பெண்ணே
கோபம் கொள்ளாதே
அம்மா வர நேரமானா சண்டை போடாதே !

அது சினிமா பாட்டா, இல்ல சும்மா உள -உளாகாட்டி பாட்டான்னு தெரியாது. ஆனா அந்த குட்டி பொண்ணுக்கு அது பொருத்தமா இருக்கும்ன்னு தோணுச்சு.

அம்மா அவளை விட்டு விட்டு வெளியே எங்கேயோ போயிட்டதால துக்கமும் கோபமும் கொள்ளும் சின்ன பெண்ணை அவளுடைய தாதி சமாதானபடுத்த முயலுகிறாள். அதை நானும் வரைஞ்சு பார்க்கணும் அப்படீன்னு நெனச்சுக்குவேன். எல்லாத்துக்கும் ஒரு டைம் வரணும் இல்லையா !

சமீபத்துல வீட்டுல அலமாரி பண்ணி முடிச்சப்புறம் சில ப்ளைவுட் துண்டு மிச்சம் கெடந்தது. அதை ஒரளவு சரியான அளவுக்கு அறுத்து கொடுக்கச் சொல்லி பத்திரம் பண்ணி வச்சுக்கிட்டேன். அப்போ அந்தம்மா மேரி வரஞ்ச படம் நெனப்புக்கு வந்துச்சு. ப்ளைவுட் மேல பேஸ்டல் எடுபடாதுன்னு தோணிச்சு. அதனால அந்த படத்தை ஆயில் வர்ணத்துலேயே முயற்சி பண்ணினேன். இன்னும் கூட பெயிண்ட் கொஞ்சம் காயணும், ஆன அதுக்குள்ள உங்க எல்லார்கிட்டேயும் காட்டிடணும்ங்கற அவசரம்.


பட அளவு 35 cm X 25 cm

அந்த படத்துல அந்த சின்ன பொண்ணோட முகத்துல இருக்கிற கோவம் கலந்த துக்கம் எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது. கூடவே அதை முத்தம் கொடுத்து சமாதானப்படுத்தும் போது குழந்தையோட கன்னம் லேசாக நசுங்கி கண் கொஞ்சம் இடுங்கி போவது வரைதலில் முக்கியமான சேலஞ்ச். முடிவு உங்க கையில.